Friday, June 14, 2024

 

                எங்க கடலம்மா!

 

நீலச்சேலை கட்டியிருக்கும்

எங்க கடலம்மா

நீவழங்கும் அருங்கொடையால்

உலகம் வாழுதம்மா!

விவசாய முதுகெலும்புக்

கிணையாய் நின்றே

மக்கள் வாழ்வை காத்து நிற்கும்

சமுத்திரத் தாயே!                                       (நீலச்சேலை)

 

பூமிப் பந்தின் நுரையீரல்

நீயேதானம்மா!-உலகில

உயிர்கள் வாழ ஆக்ஸிஜனும்

உன்னால்தானம்மா!

ஊட்டச்சத்தின் பிறப்பிடமே

நீயே கடலம்மா!-உலக

மக்கள் பசியைப் போக்குகின்ற

அன்புத் தாயம்மா!                                  (நீலச்சேலை)

 

வகைவகையாய் மீன்கள் தந்து

வாரியணைக்கிறாய்-எங்கள்

வாழ்வாதாரம் பெருக்கிடவே

வழியும் அமைக்கிறாய்!

ஏற்றுமதி அதிகரித்து

நாட்டைக் காக்கின்றாய்-இந்த

ஆதித்தாயை என்றும் போற்றி

சந்ததி காப்போம்!                                      (நீலச்சேலை)

 

உன்அலையில் கால்பதித்து

உல்லாசம் காண்போம்-உன்

அலைமடியில் ஆடிப்பாடி

ஆனந்தம் கொள்வோம்!

உப்பிட்டு உன்னும்போது

உன்னை நினைப்போம்!-உனை

சீர்குலைக்க எவர்வரினும்

கேடையாமாவோம்!                                  (நீலச்சேலை)

 

 

No comments:

Post a Comment